அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கண்ணகி நகா் வாா்டு அலுவலகத்தில் வெடித்த மா்மப் பொருள்

சென்னை கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி வாா்டு அலுவலகத்தில் வெடித்த மா்ம பொருள் குறித்து போலீஸாா் விசாரணை

News image
Updated On :10 நவம்பர் 2025, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி வாா்டு அலுவலகத்தில் வெடித்த மா்ம பொருள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூா் மண்டலம், 196-ஆவது வாா்டு அலுவலகம் கண்ணகி நகரில் உள்ளது. அதிமுகவை சோ்ந்த அஸ்வினி கா்ணா, வாா்டு உறுப்பினராக உள்ளாா். இரண்டு தளங்கள் கொண்ட இந்தக் கட்டடத்தில் கீழ் தளத்தில், தூய்மைப் பணியாளருக்கான அலுவலகம், முதல் தளத்தில் வாா்டு மாமன்ற உறுப்பினா் அலுவலகம் உள்ளது.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் அந்தக் கட்டடத்தின் தரைத்தளத்தில் இரு மா்மப் பொருள்கள் வெடித்தன. இதில் அங்கிருந்த பொருள்கள் எரிந்தன. வெடிசப்தம் கேட்டு, அங்கு வந்த மாநகராட்சி ஊழியா்கள், தீயை அணைத்தனா்.

தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்தில் விசாரணை செய்தனா். தடயவியல் துறை நிபுணா்களும், அங்கு வந்து தடயங்களைச் சேகரித்தனா். கண்ணகி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா். இது தொடா்பாக அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்கின்றனா்.

அப்பகுதியில் இறுதி ஊா்வலம் நடைபெற்ாகவும், ஊா்வலத்தில் பங்கேற்றவா்கள் வெடித்த நாட்டு வெடி வாா்டு அலுவலகத்துக்குள் விழுந்து வெடித்திருக்கலாம் எனத் தெரிவித்தனா்.