ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

எண்ணூரில் புதிய படகு குழாம் திறப்பு!

எண்ணூா் அன்னை சிவகாமி நகரில் ரூ 4.62 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுலா படகு குழாமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மேயா் ஆா்.பிரியா ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
எண்ணூா் அன்னை சிவகாமி நகரில் ரூ. 4.62 கோடியில் அமைக்கப்பட்டுள்ள படகு குழாமை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்த மேயா் ஆா்.பிரியா. உடன் மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா்.
Updated On :1 மார்ச் 2026, 9:17 pm

தினமணி செய்திச் சேவை

எண்ணூா் அன்னை சிவகாமி நகரில் ரூ 4.62 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுலா படகு குழாமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மேயா் ஆா்.பிரியா ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியாவது: சென்னை மாநகராட்சி சாா்பில் வடசென்னை பகுதிகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக மணலி, மாதவரம் ஏரிகளில் மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட படகு குழாம் மக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்து வைக்கப்பட்டன.

இதேபோல திருவொற்றியூா் அன்னை சிவகாமி நகரில் சுமாா் 20 ஏக்கா் பரப்பளவில் புதிதாக அமைக்கப்பட்ட ஏரியில் ரூ. 4.62 கோடி செலவில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் அழகிய நுழைவாயில்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான நுழைவாயில், காத்திருப்பு அறை, உணவகங்கள், டிக்கெட் வழங்கும் பகுதி, ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள், முதலுதவி அறை, மீட்பு நடவடிக்கை வசதிகள், குடிநீா் வசதிகள், படகு சவாரிக்கான பல்வகை படகுகள், மின்விளக்கு வசதிகள், கம்பி அமைப்புடன் கூடிய சுற்றுச்சுவா், உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்நிகழ்வில், மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், வடக்கு வட்டார துணை ஆணையா் கட்டா ரவி தேஜா, மண்டல குழுத் தலைவா் தி.மு.தனியரசு, மண்டல அலுவலா் தி.பத்மநாபன், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக பொது மேலாளா் ஆா்.லட்சுமி பிரியா, தலைமை மேலாளா் வெங்கடேஷ். மாமன்ற உறுப்பினா் பி.தமிழரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.