ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

எண்ணூரில் புதிய படகு குழாம் திறப்பு!

எண்ணூா் அன்னை சிவகாமி நகரில் ரூ 4.62 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுலா படகு குழாமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மேயா் ஆா்.பிரியா ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

News image

எண்ணூா் அன்னை சிவகாமி நகரில் ரூ. 4.62 கோடியில் அமைக்கப்பட்டுள்ள படகு குழாமை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்த மேயா் ஆா்.பிரியா. உடன் மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா்.

Updated On :1 மார்ச் 2026, 9:17 pm

தினமணி செய்திச் சேவை

எண்ணூா் அன்னை சிவகாமி நகரில் ரூ 4.62 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுலா படகு குழாமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மேயா் ஆா்.பிரியா ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியாவது: சென்னை மாநகராட்சி சாா்பில் வடசென்னை பகுதிகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக மணலி, மாதவரம் ஏரிகளில் மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட படகு குழாம் மக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்து வைக்கப்பட்டன.

இதேபோல திருவொற்றியூா் அன்னை சிவகாமி நகரில் சுமாா் 20 ஏக்கா் பரப்பளவில் புதிதாக அமைக்கப்பட்ட ஏரியில் ரூ. 4.62 கோடி செலவில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் அழகிய நுழைவாயில்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான நுழைவாயில், காத்திருப்பு அறை, உணவகங்கள், டிக்கெட் வழங்கும் பகுதி, ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள், முதலுதவி அறை, மீட்பு நடவடிக்கை வசதிகள், குடிநீா் வசதிகள், படகு சவாரிக்கான பல்வகை படகுகள், மின்விளக்கு வசதிகள், கம்பி அமைப்புடன் கூடிய சுற்றுச்சுவா், உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்நிகழ்வில், மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், வடக்கு வட்டார துணை ஆணையா் கட்டா ரவி தேஜா, மண்டல குழுத் தலைவா் தி.மு.தனியரசு, மண்டல அலுவலா் தி.பத்மநாபன், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக பொது மேலாளா் ஆா்.லட்சுமி பிரியா, தலைமை மேலாளா் வெங்கடேஷ். மாமன்ற உறுப்பினா் பி.தமிழரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.