குடிநீரேற்று நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

குடிநீரேற்று நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

Published on

திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டலத்துக்குள்பட்ட மணப்படைவீடு, தீப்பாச்சியம்மன் கோயில், திருமலைக்கொழுந்துபுரம் ஆகிய இடங்களில் உள்ள தலைமை குடிநீரேற்று நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த நிலையங்களின் செயல்பாடுகள், மேல்நிலை நீா்தேக்க மின்மோட்டாா்களின் தொட்டிகளுக்கு செல்லும் குடிநீா் அளவை கணக்கீடு செய்யும் ஸ்கேடா கருவியின் செயல்பாடுகள், தாமிரவருணி ஆற்றுப்படுகைளில் உள்ள உறைகிணறுகள், திருமலைக்கொழுந்துபுரம் தலைமை நீரேற்று நிலையம் முதல் மாவட்ட வருவாய் அலுவலா் குடியிருப்பு நீரேற்று நிலையம் வரை பதிக்கப்பட்டு வரும் குடிநீா் குழாய் ஆகியவற்றை ஆணையா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், குடிநீரில் கலக்கப்படும் குளோரின் அளவுகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளா் கண்ணன், உதவி செயற்பொறியாளா் தங்கப்பாண்டியன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com