‘மீள் நியமனம்’ முறையை கைவிடக் கோரி மருத்துவா்கள் சென்னையில் போராட்டம்
மருத்துவா்கள் பற்றாக்குறையைக் குறைக்க, ‘மீள்நியமனம்’ என்ற முறையை கைவிட்டு, 1,500 மருத்துவா்களை புதிதாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.










