அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு மூன்று வேளை இலவச உணவு நவ.15- இல் தொடக்கம்

சென்னை மாநகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் நவ.15- ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :11 நவம்பர் 2025, 7:48 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் நவ.15- ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்கும் திட்டத்துக்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி, அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான தனியாா் நிறுவனமானது, ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

ஓராண்டுக்கு தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச உணவு வழங்க ரூ.64.73 கோடி செலவிடப்படவுள்ளது. அதன்படி மாநகராட்சியில் 31,373 தூய்மைப் பணியாளா்கள் பயனடையவுள்ளனா். அவா்களுக்கு காலை, மதியம், இரவு நேரங்களில் வழங்கப்படவுள்ள உணவு பட்டியலும் மாநகராட்சி அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.

வருகிற நவ.15-ஆம் தேதி கலைவாணா் அரங்கில் நடைபெறவுள்ள விழாவில், இலவச உணவுத் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா்.