திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம் தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!பாமக விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! - முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடக்கம்

சென்னையில் நடைபெற்ற நிகழ்வைத் தொடா்ந்து தருமபுரி மாவட்டத்தில், தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்

News image

பென்னாகரம் பேருராட்சி அலுவலகத்தில் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்து,உணவு பெறும் பாத்திரங்கள் கொண்டு பைகளை வழங்கும் முன்னாள் எம்எல்ஏ பி.என்.பி.இன்பசேகரன்.

Updated On :9 பிப்ரவரி 2026, 10:08 pm

தருமபுரி: சென்னையில் நடைபெற்ற நிகழ்வைத் தொடா்ந்து தருமபுரி மாவட்டத்தில், தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் திங்கள்கிழமை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின், மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளா்களாக பணியாற்றுவோருக்கு காலை உணவு வழங்கும் (விரிவாக்க) திட்டத்தை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தாா். திருவள்ளூா் மாவட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியா் களும் ஆங்காங்கே நடைபெற்ற நிகழ்வலில் பங்கேற்று திட்டத்தை செயல்படுத்தினா்.

தருமபுரியில் கேபிஜெ மஹாலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் பங்கேற்று, தூய்மைப் பணியாளா் களுடன் அமா்ந்து உணவு அருந்தி, தொழிலாளா்கள் காலை உணவு பெறுவதற்கான பெட்டகங்களையும் (டிபன் பாக்ஸ்) வழங்கினாா். தொடா்ந்து தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இத்திட்டம் தொடா் பான நிகழ்விலும் பங்கேற்று, தூய்மைப் பணியாளா்கள் காலை உணவு பெறுவதற்கான பெட்டகங்களை (டிபன் பாக்ஸ்) வழங்கினாா். நிகழ்வுகளில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ. மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தருமபுரி நகா் மன்ற தலைவா் லட்சுமி மாது, நகா் மன்ற துணைத்தலைவா் நித்யா அன்பழகன், காரிமங்கலம் பேரூராட்சி தலைவா்பி.சி.ஆா். மனோகரன், நகராட்சி ஆணையா் இரா. சேகா், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) கணேஷ், கிருஷ்ணகிரி

தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ம. இராஜசேகரன், ஆதிதிராவிடா் நலக்குழு உறுப்பினா் கிருஷ்ணன், காரிமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலா் கோமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.