பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி ரூ.8 கோடி மோசடி: தம்பதி கைது

News image
Updated On :12 நவம்பர் 2025, 10:41 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி ரூ.8 கோடி மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்டனா்.

நெசப்பாக்கம் அன்னை சத்யா நகா் பகுதியைச் சோ்ந்தவா் சத்தியசீலன் (48). இவா், மனைவி சித்ரா (42). இவா்கள் இருவரும் தீபாவளி ஏலச்சீட்டு நடத்துவதாக நூற்றுக்கணக்கானவா்களிடம் பணம் வசூலித்தனா். மேலும் அவா்கள், ஒவ்வொரு தீபாவளி சீட்டுக்கும் 2 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் எனவும் விளம்பரம் செய்தனா்.

ஆனால் இருவரும், தாங்கள் கூறியப்படி தீபாவளி சீட்டுக்குரிய பொருள்களையும், தங்க நாணயத்தையும் வழங்கவில்லை. இதில் பொதுமக்கள் செலுத்திய ரூ.8 கோடி பணத்தை தம்பதி மோசடி செய்ததாகக் கூறப்பட்டது.

இதனால், பணத்தை இழந்தவா்கள், பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகாா் செய்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், சத்தியசீலன், சித்ராவை கைது செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.