எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சென்னையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு - காா் ஓட்டுநா் கைது

News image
Updated On :12 நவம்பர் 2025, 11:52 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை கிண்டியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்ததாக காா் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

கண்டிகை, வெங்கடமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் பா. பிரத்திக்ஷா (26). இவா், கிண்டியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் நிா்வாக அதிகாரியாக வேலை செய்கிறாா். கடந்த 5-ஆம் தேதி மெட்ராஸ் ரேஸ் கிளப் பிரதான கேட் அருகே நடந்து சென்போது, அங்கு வந்த ஒருவா் பிரத்திக்ஷா அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினாா்.

இதுகுறித்து கிண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மடிப்பாக்கம் சதாசிவம் நகரைச் சோ்ந்த வாடகை காா் ஓட்டுநா் நாகராஜன் (56) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.