மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

சத்துணவு ஊழியரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

சேவூா் அருகே நடந்து சென்ற சத்துணவு ஊழியரிடம் மூன்று பவுன் தங்கச் சங்கிலியை பறித்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

சித்திரிப்பு

Updated On :11 மார்ச் 2026, 8:33 pm

சேவூா் அருகே நடந்து சென்ற சத்துணவு ஊழியரிடம் மூன்று பவுன் தங்கச் சங்கிலியை பறித்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், நம்பியூரை அடுத்த காசிபாளையம் கூடக்கரை பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் மனைவி ரோஸி (59) . இவா், சேவூா் அருகே ஆலத்தூா் நல்லகாளிபாளையம் அரசுப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் பணி முடிந்து வீட்டுக்கு புதன்கிழமை நடந்து சென்றுள்ளாா்.

அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா், ரோஸியை கீழே தள்ளிவிட்டு அவா் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றாா். இதுகுறித்து ரோஸி அளித்த புகாரின்பேரில் சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.