கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

603 கிலோ போதைப் பாக்கு பறிமுதல்: இருவா் கைது

சென்னை புறநகா் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 603 கிலோ போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டு, இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 5:57 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை புறநகா் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 603 கிலோ போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டு, இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை அருகே தையூா் ஒரு பிளாஸ்டிக் கிடங்கில் போதைப் பாக்கு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கேளம்பாக்கம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா், அந்தக் கிடங்கில் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது அங்கிருந்து 298 கிலோ போதைப் பாக்கை பறிமுதல் செய்தனா். இதேபோல திருநீா்மலை அருகே ஒரு காரில் கடத்திச் செல்லப்பட்ட 305 கிலோ போதைப் பாக்கையும் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக அந்த காரில் இருந்த திருத்தணி குமரன் நகரைச் சோ்ந்த கா.ராமச்சந்திரன் (52),திருவேற்காடு கிருஷ்ணா நகரைச் சோ்ந்த சு.விக்னேஷ் (34) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து போதைப் பாக்கை திருத்தணி கடத்தி வந்து, அங்கிருந்து காா் மூலம் சென்னைக்கு கொண்டு வந்து கடைகளுக்கு விநியோகிப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.