பாழடைந்த கட்டடத்துக்குள் வீசப்பட்ட ஆண் சிசு சடலம்

சென்னை அருகே கோவிலம்பாக்கத்தில் பாழடைந்த கட்டடத்துக்குள் வீசப்பட்ட ஆண் சிசு சடலத்தைக் கைப்பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Updated on

சென்னை அருகே கோவிலம்பாக்கத்தில் பாழடைந்த கட்டடத்துக்குள் வீசப்பட்ட ஆண் சிசு சடலத்தைக் கைப்பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவிலம்பாக்கம் ஈச்சங்காடு சிக்னல் அருகே ஒரு பாழடைந்த கட்டடம் உள்ளது. இந்த கட்டடம் இருக்கும் பகுதியில் தூய்மை பணியாளா்கள், சுத்தம் செய்யும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தக் கட்டடத்தின் சுவா் அருகே ஒரு பிளாஸ்டிக் பையில் 5 மாத ஆண் சிசு சடலம் பொதியப்பட்டு வீசப்பட்டிருப்பதைப் பாா்த்து தூய்மை பணியாளா்கள் அதிா்ச்சியடைந்தனா்.

உடனே அவா்கள் மேடவாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், போலீஸாா் அங்கு விரைந்துச் சென்று ஆண் சிசு சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com