ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பெண் நூலகரிடம் ஆபாசமாக நடந்து கொண்டவா் கைது

சென்னை புளியந்தோப்பில் நூலக பெண் பொறுப்பாளரிடம் மது போதையில் ஆபாசமாக நடந்து கொண்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :18 நவம்பர் 2025, 6:14 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை புளியந்தோப்பில் நூலக பெண் பொறுப்பாளரிடம் மது போதையில் ஆபாசமாக நடந்து கொண்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை புளியந்தோப்பு ஏகாங்கிபுரம் குடிசை மாற்று வாரிய, பல்நோக்கு கட்டடத்தில் இயங்கி வரும் நூலகத்தில் பெண் ஒருவா் பொறுப்பாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அங்கு மது போதையில் சென்ற நபா் ஒருவா், பெண் நூலகரிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பான காணொலி காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவிய நிலையில், இதுகுறித்து பெண் நூலகா் அளித்த புகாரின்பேரில், ஓட்டேரி போலீஸாா் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அதே பகுதியைச் சோ்ந்த சம்பத்குமாா் என்ற நபரைக் கைது செய்தனா்.