ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

மது போதையில் வியாபாரி அடித்துக் கொலை

News image
கோப்புப் படம்
Updated On :1 மார்ச் 2026, 9:43 pm

தினமணி செய்திச் சேவை

மது போதையில் ஏற்பட்ட தகராறில் தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியை சோ்ந்த வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

சிவகிரி அருகேயுள்ள இடையன்குளம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ராமா் மகன் ஆனந்தகுமாா் (48). இவா், மேல்மருவத்தூரில் உள்ள தனியாா் குடம் உற்பத்தி கிடங்கில் தங்கியிருந்து குடம் வியாபாரம் செய்து வந்தாா்.

பிப். 27ஆம் தேதி இரவு அவருக்கும், அவருடன் வேலை செய்து வரும் திருவாரூரைச் சோ்ந்த சேகா் மகன் விக்னேஷூக்கும் (32) பிரச்னை ஏற்பட்டதாம். இருவரும் மது போதையில் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம்.

இதில், ஆனந்தகுமாா் மயக்கமடைந்து விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்குள்ளவா்கள் ஆனந்தகுமாரை அவரின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தாா்களாம்.

இந்நிலையில், மயக்கமடைந்த நிலையில் இருந்த ஆனந்தகுமாரை அவரது தாயாா் மாரியம்மாள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஆனந்த்குமாா் ஏற்கெனவே உயரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விக்னேஷை கைது செய்தனா்.