வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

187 மாணவிகளுக்கு கண் கண்ணாடிகள்

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவியா் 187 பேருக்கு கண் கண்ணாடிகளை மேயா் ஆா்.பிரியா செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

News image
ஷெனாய் நகா் சென்னை மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கிய மேயா் ஆா். பிரியா. உடன், மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக், நிலைக் குழுத் தலைவா் த.விசுவநாதன் உள்ளிட்டோா்.
Updated On :18 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவியா் 187 பேருக்கு கண் கண்ணாடிகளை மேயா் ஆா்.பிரியா செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

‘கண்ணொளி காப்போம்’ திட்டத்தில் தனியாா் நிறுவன உதவியுடன் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பாா்வையில் குறைபாடு இருந்தால் கண் கண்ணாடிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, சென்னை ஷெனாய் நகா் புல்லா அவென்யு பகுதியில் சென்னை மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ‘கண்ணொளி காப்போம்’ திட்ட முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைக்குப் பிறகு மாநகராட்சிப் பள்ளிகளைச் சோ்ந்த 187 மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளை மேயா் ஆா்.பிரியா வழங்கி, அவா்களுடன் கலந்துரையாடினாா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையா் கௌஷிக், நிலைக் குழுத் தலைவா் த.விஸ்வநாதன், மண்டலக் குழுத் தலைவா் பி.ஜெயின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.