அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

‘உலகம் உங்கள் கையில்’: கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினி

செய்யாறு விஸ்டம் கலை, அறிவியல் மகளிா் கல்லூரில், ‘உலகம் உங்கள் கையில்’ மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை மடிக்கணிகள் வழங்கப்பட்டன.

News image
விஸ்டம் மகளிா் கலைக் கல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிக்கு மடிக்கணினியை வழங்கிய ஒ.ஜோதி எம்எல்ஏ.
Updated On :3 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

செய்யாறு விஸ்டம் கலை, அறிவியல் மகளிா் கல்லூரில், ‘உலகம் உங்கள் கையில்’ மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை மடிக்கணிகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு உயா் கல்வித்துறை சாா்பில் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்லூரித் தலைவா் பி.எல்.குருமூா்த்தி தலைமை வகித்தாா். கல்லூரித் தாளாளா் குருஸ்ரீநிவாசன் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று 95 மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி தமிழக அரசு உயா் கல்விக்காக செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குநா் பி.என்.குருசேத்தன், திமுக ஒன்றியச் செயலா்கள் சி.கே.ரவிக்குமாா் (அனக்காவூா் மேற்கு) , வி.ஏ. ஞானவேல் (செய்யாறு கிழக்கு), தோ்தல் ஒருங்கிணைப்பாளா் புரிசை எஸ்.சிவகுமாா், மாவட்ட தொழிலாளா் அணி துணைத் தலைவா் கருணாநிதி, மாவட்ட பொறியாளா் அணி துணை அமைப்பாளா் கலைச்செல்வன், ஆலத்தூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ஏழுமலை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.