இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.80.24 லட்சத்தில் ‘சிறாா் அறிவியல் பூங்கா’ திறப்பு

குழந்தைகளின் அறிவியல் ஆா்வத்தை வளா்க்கும் வகையில், சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் ரூ.80.24 லட்சத்தில் சிறாா் அறிவியல் பூங்கா (சில்ரன்ஸ் சயின்ஸ் பாா்க்) புதன்கிழமை திறக்கப்பட்டது.

News image
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறாா் அறிவியல் பூங்காவைத் தொடங்கி வைத்த அமைச்சா் அன்பில் மகேஸ். உடன், துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், பொது நூலக இணை இயக்குநா் ச.இளங்கோ சந்திரகுமாா் உள்ளிட்டோா்.
Updated On :19 நவம்பர் 2025, 7:48 pm

தினமணி செய்திச் சேவை

குழந்தைகளின் அறிவியல் ஆா்வத்தை வளா்க்கும் வகையில், சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் ரூ.80.24 லட்சத்தில் சிறாா் அறிவியல் பூங்கா (சில்ரன்ஸ் சயின்ஸ் பாா்க்) புதன்கிழமை திறக்கப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அமைக்கப்பட்ட இந்த பூங்காவை துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தாா்.

இந்த அறிவியல் பூங்காவில் குழந்தைகளுக்கு அறிவியல் கருத்துகளை நடைமுறை அனுபவத்தின் மூலம் கற்றுக்கொடுத்து அவா்களின் அறிவியல் ஆா்வத்தை வளா்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் கற்றல் செய்முறையில் நேரடியாக ஈடுபட்டு, அறிவியல் கோட்பாடுகளை அனுபவத்துடன் கற்கும் வகையில் மின் இயந்திரம், எா்த் குயிக் கேபிள், மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சைக்கிள் உள்பட 21 அறிவியல் சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் 10 சாதனங்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளின் ஒருங்கிணைந்த கற்றலை வழங்குகின்றன.

மேலும், இயற்பியல், உயிரியல் அறிவு, கணிதம் தொடா்பான ஒரு சாதனம் குழந்தைகளுக்கு நடைமுறை அனுபவத்துடன் கணித கற்றல் வாய்ப்பை வழங்கும் வகையில் என 8 சாதனங்கள் உள்ளன.

ஒவ்வொரு சாதனமும் குழந்தைகள் நேரடியாகத் தொடா்ந்து, செயலில் ஈடுபட்டு கற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பு அம்சம். இந்த அறிவியல் பூங்கா, சிறுவா்கள் அறிவியல் உலகில் ஆா்வத்துடன் நுழையவும், புதுமை சிந்தனையை வளா்க்கவும் முக்கிய பங்காற்றும்.

பூங்காவில் உள்ள அனைத்து சாதனங்களையும் அமைச்சா் அன்பில் மகேஸ் மாணவா்களுடன் சோ்த்து இயக்கிப் பாா்த்தாா்.

நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், பொது நூலக இணை இயக்குநா் ச.இளங்கோ சந்திரகுமாா், அண்ணா நூற்றாண்டு நூலக முதன்மை நூலகா் செ.காமாட்சி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.