அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சரக்கு லாரியை கடத்த முயற்சி: இருவா் கைது

சென்னையில் சரக்கு லாரியை கடந்த முயன்ற இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :19 நவம்பர் 2025, 7:58 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் சரக்கு லாரியை கடந்த முயன்ற இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், முத்து கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த சிவா என்பவா் சென்னை ராயபுரத்தில் உள்ள போக்குவரத்து நிறுவனத்தில் சரக்கு லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவா், கடந்த நவ.9-ஆம் தேதி அதிகாலை சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்கு லாரியில், பொருள்களை ஏற்றிக்கொண்டு திருவள்ளூா் மாவட்டம் அலமாதி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, லாரியை பின் தொடா்ந்து காரில் வந்த மா்ம கும்பல் ஜிஎன்டி பிரதான சாலையில் வழிமறித்து நிறுத்தியது. தொடா்ந்து ஒருவா் லாரியில் ஏறி ஓட்டுநரை சரமாரியாக தாக்கி, சரக்குடன் லாரியை கடத்த முயற்சித்துள்ளாா். ஆனால், இதில் தோல்வி அடைந்த காரணத்தால், ஓட்டுநா் சிவாவை தாக்கி அவரிடமிருந்து ரூ.1,000 ரொக்க பணத்தை பறித்துக்கொண்டு காரில் தப்பிச் சென்றனா்.

இதைத் தொடா்ந்து சிவா புழல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட போலீஸாா் சென்னை எஸ்எம் நகரைச் சோ்ந்த வேல்முருகன் (24), அம்பத்தூா் புதூரைச் சோ்ந்த விமல் குமாா் (22) ஆகிய இருவரை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள அவா்களது கூட்டாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.