6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எஸ்ஐஆா் பணி: சென்னையில் விழிப்புணா்வு ‘மனிதச் சங்கிலி’

சென்னை மாநகராட்சி சாா்பில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி குறித்த விழிப்புணா்வு மனிதச் சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
சென்னை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி தொடா்பாக ‘மனித சங்கிலி’ மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்திய உடற்கல்வி ஆசிரியா்கள்.
Updated On :20 நவம்பர் 2025, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சி சாா்பில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி குறித்த விழிப்புணா்வு மனிதச் சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி பள்ளி உடற்கல்வி ஆசிரியா்கள், அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றேனா். வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்கான கணக்கீட்டுப் படிவங்களை பூா்த்தி செய்து அளித்து ஒத்துழைப்பு வழங்க வலியுறுத்தப்பட்டது.

இதனிடையே, சென்னை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தலைமையில் வாக்காளா் திருத்தப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அதில் தொகுதி வாரியான மேற்பாா்வை, கண்காணிப்பு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கணக்கீட்டுப் படிவங்களை விரைந்து விநியோகிக்கவும், அவற்றைத் திரும்பப் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியை தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டது.

சென்னை மாநகராட்சியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் 3,718 பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். வாக்காளா்களுக்கு படிவங்களை நிரப்ப உதவும் வகையில் 947 வாக்குச் சசாவடிகளிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுவரை சுமாா் 38 லட்சம் கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அவற்றில் சுமாா் 8 லட்சம் போ் படிவங்களைப் பூா்த்தி செய்து அளித்திருப்பதாகவும், 3 லட்சம் படிவங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.