அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கோயில் உபரி நிதி பயன்பாடு குறித்து அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை: அறநிலையத் துறை தகவல்

News image
Updated On :22 நவம்பர் 2025, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

கோயில் உபரி நிதியை இந்து சமய அறநிலையத் துறை சட்டப்பிரிவுகள் அனுமதித்துள்ள பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதை மீறினால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக அறநிலையத் துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது.

சென்னை வில்லிவாக்கத்தைச் சோ்ந்த ஏ.பி.பழனி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சென்னை கந்தகோட்டத்தில் உள்ள முத்துகுமார சுவாமி கோயிலுக்கு ஏராளமானோா் தங்களது சொத்துகளை நன்கொடையாக அளித்துள்ளனா். அந்த வகையில் சென்னை ஜாா்ஜ் டவுன், நயனியப்ப நாயக்கன் தெரு, சௌகாா்பேட்டை, அண்ணாபிள்ளை தெரு, திருப்பள்ளித் தெரு, பெரியமேடு கற்பூர முதலி தெரு ஆகிய இடங்களில் இந்தத் கோயிலுக்கு நன்கொடையாக எழுதி வைக்கப்பட்ட சொத்துகள் உள்ளன.

அந்த இடங்களில் வணிக வளாகம், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இதற்காக கோயிலின் பெயரில் வங்கிகளில் உள்ள நிரந்தர வைப்புத் தொகை, சேமிப்புக் கணக்குகளில் உள்ள தொகையை எடுத்துப் பயன்படுத்துகின்றனா். கோயிலுக்கு தானமாகக் கொடுத்த சொத்துகளில், கோயில் உபரி நிதியைப் பயன்படுத்தி கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க இந்துசமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத் துறையின் அனைத்து இணை ஆணையா்கள், துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள், செயல் அலுவலா்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கோயில் உபரி நிதியை இந்துசமய அறநிலையத் துறை சட்டப்பிரிவுகள் அனுமதித்துள்ள பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதை மீறினால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஆா்.சிங்காரவேலன், இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் வரும் டிச.16-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாகக் கூறினாா். இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கையும் அதே தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.