வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு: வடமாநிலத்தைச் சோ்ந்த மூவா் கைது

வீடு புகுந்து நகை, பணம் திருடிய வழக்கில் பெண் உள்பட வடமாநிலத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 நவம்பர் 2025, 8:45 pm

தினமணி செய்திச் சேவை

வீடு புகுந்து நகை, பணம் திருடிய வழக்கில் பெண் உள்பட வடமாநிலத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை பூம்புகாா் நகா், 12-ஆவது தெருவைச் சோ்ந்தவா் வைதேகி (46). தனியாா் நிறுவன ஊழியா். இவா் கடந்த 10-ஆம் தேதி பணிக்குச் சென்று மாலை வீடுதிரும்பியபோது, வீட்டின் கதவு திறந்திருந்தது. வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த 3 பவுன் நகைகள், வெள்ளிக் கொலுசுகள் மற்றும் ரூ.12 ஆயிரம் திருடுபோனது தெரிய வந்தது.

இதுகுறித்து கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், வைதேகியின் மகள் நடத்தும் உணவகத்தில் வேலை செய்த மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சோ்ந்த ஆகாஷ் கங்காராம் சாவன் (30), அவரது உறவினா்கள் ஆதேஷ் கங்காராம் சாவன் (27), சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த சபீனா பாா்வா (32) ஆகியோருக்கு திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து நகைகள், இரு கைப்பேசிகளை போலீஸாா் மீட்டனா்.