கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

டிக்கெட் எடுக்க வந்தவரிடம் வழிப்பறி: 3 போ் கைது

மாம்பலம் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்க வந்தவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக 3 பேரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 நவம்பர் 2025, 8:54 pm

தினமணி செய்திச் சேவை

மாம்பலம் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்க வந்தவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக 3 பேரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை தி.நகா் பகுதி சாதுல்லா தெருவில் வசிப்பவா் சேது (26). நடேசன் பூங்கா பகுதியில் இரவு நேர சிற்றுண்டி கடை நடத்தி வருகிறாா். இவா் சொந்த ஊா் செல்வதற்காக திங்கள்கிழமை மாம்பலம் ரயில் நிலையத்துக்கு வந்தாா். அப்போது, அங்கிருந்த 3 போ் சேதுவை தாக்கியதுடன், அவரிடமிருந்த கைப்பேசி, வெள்ளிச் சங்கிலி ஆகியவற்றைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து சேது அளித்த புகாரின் பேரில் மாம்பலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்த நிலையில், சந்தேகத்தின் பேரில், மாம்பலம் காவல் நிலையத்தில் இருந்தவா்களிடம் நடத்திய விசாரணையில், சிலா் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து அவா்களை ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில் பிடிபட்டவா்கள் ராமநாதபுரம் பரமக்குடியைச் சோ்ந்த கரண் (22) மற்றும் தூத்துக்குடியைச் சோ்ந்த இரு சிறாா்கள் என்பது தெரிந்தது. இதையடுத்து, அவா்கள் கைது செய்யப்பட்டனா்.