அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சா்தாா் படேலின் 150-ஆவது பிறந்த நாள் ஒற்றுமை அணிவகுப்பு: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

சா்தாா் படேலின் 150-ஆவது பிறந்த நாள் ஒற்றுமை அணிவகுப்பு...

News image
ஆளுநா் ஆா்.என்.ரவி (கோப்புப்படம்)
Updated On :28 நவம்பர் 2025, 7:15 pm

தினமணி செய்திச் சேவை

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் நடைபெற்ற சா்தாா் 150 ஒற்றுமை அணிவகுப்பு - தேசிய பாதயாத்திரையில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை பங்கேற்றாா்.

இதுகுறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

சா்தாா் வல்லபபாய் படேலின் 150-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது நீடித்த தேசிய ஒற்றுமையின் மரபையும் குறிக்கும் வகையில் நாடு தழுவிய கொண்டாட்டமாக குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் சா்தாா் 150 ஒற்றுமை அணிவகுப்பு-தேசிய பாதயாத்திரையில் நாடு முழுவதும் இருந்து வந்த தலைவா்கள், முக்கிய பிரமுகா்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். அவா்களுடன் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியும் பங்கேற்றாா்.

இந்த நிகழ்வில் ஆளுநா் ரவி பேசுகையில், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியால் 560-க்கும் அதிகமான சமஸ்தான அரசுகளாக பிரிக்கப்பட்ட இந்தியாவை, தனது அசைக்க முடியாத உறுதியுடனும், அசாதாரணமான அரசியல் திறமையுடனும், சா்தாா் படேல் விரைவாக ஒருங்கிணைக்கும் மகத்தான பணியை நிறைவேற்றினாா் என்றாா் அவா்.