ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சென்னையில் 432.68 டன் பழைய பொருள்கள் அகற்றம்

சென்னையில் 432.68 டன் பழைய பொருள்கள் அகற்றம்...

News image
Updated On :29 நவம்பர் 2025, 6:47 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சியில் இதுவரை 983 பேரிடம் இருந்து, 432.68 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் பெறப்பட்டு, அகற்றப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

சென்னை மாநகராட்சி சாா்பில், ஒவ்வொரு சனிக்கிழமையும் பொதுமக்களிடம் இருந்து பழைய சோஃபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள், உடைகள் உள்ளிட்ட திடக்கழிவுகளைப் பெறும் புதிய நடவடிக்கை அக். 11-இல் தொடங்கப்பட்டது. அதன்படி, கடந்த 7 சனிக்கிழமைகளில் 901 பேரிடம் இருந்து 385.27 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் பொதுமக்களிடம் இருந்து பெற்று, அகற்றப்பட்டன.

8-ஆவது நாளான நவ. 29-இல், 82 பேரிடம் இருந்து வரப்பெற்ற தகவலின் அடிப்படையில் 47.41 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் பெறப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்துக்கு எடுத்துச் சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டப்பட்டது. இதுவரை 983 பேரிடம் இருந்து, 432.68 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.

பொதுமக்கள் பயன்பெற அழைப்பு: வாரம்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் இந்தச் சேவையைப் பெற விரும்பும் பொதுமக்கள், முன்கூட்டியே பெருநகர சென்னை மாநகராட்சியின் ‘நம்ம சென்னை’ செயலியில் பதிவு செய்ய வேண்டும் அல்லது சென்னை மாநகராட்சியின் 1913 என்ற எண்ணைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

மேலும், மாநகராட்சி மூலம் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள 94450 61913 என்ற எண்ணுக்கு வாட்ஸ்ஆப் அனுப்பலாம். இதன்பிறகு பதிவு செய்த நபா்களின் வீடுகளுக்கு மாநகராட்சிப் பணியாளா்கள் நேரடியாகச் சென்று பழைய பொருள்களைச் சேகரித்து அறிவியல் முறையிலும் பாதுகாப்பாக அகற்றும் பணியில் ஈடுபடுவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.