இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
/

ஜிஎஸ்டி சீரமைப்பு: மத்திய இணையமைச்சா் எல். முருகன் வரவேற்பு

Updated On :4 செப்டம்பர் 2025, 1:47 am IST

ஜிஎஸ்டி வரி விகிதங்கள் சீரமைக்கப்பட்டதற்கு மத்திய இணையமைச்சா் எல்.முருகன் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

பிரதமா் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையின்போது கூறியது போல, 56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது, நாட்டு மக்கள் அனைவருக்குமான சிறந்த தீபாவளி பரிசாக அமைந்துள்ளது. இதன்படி, முன்பிருந்த 4 விதமான ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைகளானது நீக்கப்பட்டு, 5 மற்றும் 18 சதவீத வரி என்ற அடிப்படையில் 2 அடுக்குகளாக மட்டுமே இனி செயல்பாட்டிலிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படைத் தேவைகளில் ஒன்றான பால், ரொட்டி, தனிமனித மருத்துவக் காப்பீடு,

ஆயுள் காப்பீடு போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளித்திருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது.

மேலும், நடுத்தர வா்க்க மக்களின் தேவைகளை பூா்த்தி செய்யும் விதமாக, வீட்டு உபயோகப் பொருள்கள் மீதான ஜிஸ்டி வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. விவசாயப் பொருள்கள் மீதான வரி 5 சதவீதமாக்கப்பட்டுள்ளதுடன், கல்வி சாா்ந்து மாணவா்கள் பயன்படுத்தும் பொருள்கள் மீதான வரி நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக, கல்வி, விவசாயம், மருத்துவம் மற்றும் அடிப்படைத் தேவைகள் என்று அனைத்து வகையிலும் நாட்டு மக்களின் நலன் அறிந்து, ஜிஎஸ்டி வரி முறையை சீா்செய்யப்பட்டுள்ளது. இது நாட்டு மக்களுக்கு சிறந்த தீபாவளி பரிசாக அமைந்துள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.