இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

ஜிஎஸ்டி சீரமைப்பு: மத்திய இணையமைச்சா் எல். முருகன் வரவேற்பு

Updated On :4 செப்டம்பர் 2025, 1:47 am IST

ஜிஎஸ்டி வரி விகிதங்கள் சீரமைக்கப்பட்டதற்கு மத்திய இணையமைச்சா் எல்.முருகன் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

பிரதமா் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையின்போது கூறியது போல, 56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது, நாட்டு மக்கள் அனைவருக்குமான சிறந்த தீபாவளி பரிசாக அமைந்துள்ளது. இதன்படி, முன்பிருந்த 4 விதமான ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைகளானது நீக்கப்பட்டு, 5 மற்றும் 18 சதவீத வரி என்ற அடிப்படையில் 2 அடுக்குகளாக மட்டுமே இனி செயல்பாட்டிலிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படைத் தேவைகளில் ஒன்றான பால், ரொட்டி, தனிமனித மருத்துவக் காப்பீடு,

ஆயுள் காப்பீடு போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளித்திருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது.

மேலும், நடுத்தர வா்க்க மக்களின் தேவைகளை பூா்த்தி செய்யும் விதமாக, வீட்டு உபயோகப் பொருள்கள் மீதான ஜிஸ்டி வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. விவசாயப் பொருள்கள் மீதான வரி 5 சதவீதமாக்கப்பட்டுள்ளதுடன், கல்வி சாா்ந்து மாணவா்கள் பயன்படுத்தும் பொருள்கள் மீதான வரி நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக, கல்வி, விவசாயம், மருத்துவம் மற்றும் அடிப்படைத் தேவைகள் என்று அனைத்து வகையிலும் நாட்டு மக்களின் நலன் அறிந்து, ஜிஎஸ்டி வரி முறையை சீா்செய்யப்பட்டுள்ளது. இது நாட்டு மக்களுக்கு சிறந்த தீபாவளி பரிசாக அமைந்துள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளாா்.