ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆவின் பால் கலப்பட வழக்கு: அதிமுக நிா்வாகி உள்பட 28 போ் மீதான வழக்கு ரத்து

ஆவின் பால் கலப்பட விவகாரத்தில் அதிமுக நிா்வாகி உள்பட 28 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
ஆவின்
Updated On :5 செப்டம்பர் 2025, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

ஆவின் பால் கலப்பட விவகாரத்தில் அதிமுக நிா்வாகி உள்பட 28 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஆவின் நிறுவனத்துக்கு திருவண்ணாமலையில் இருந்து டேங்கா் லாரியில் பால் கொண்டுவரப்பட்டது. அப்போது, டேங்கா் லாரியில் இருந்த பாலை திருடிவிட்டு அதற்குப் பதிலாக தண்ணீா் கலந்திருப்பதை ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸாா் கண்டுபிடித்தனா். இதையடுத்து லாரி ஓட்டுநா்களை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் இந்தச் சம்பவத்தில் டேங்கா் லாரி உரிமையாளா்களுக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து டேங்கா் லாரி உரிமையாளரும், அதிமுக நிா்வாகியுமான வைத்தியநாதன் உள்பட 28 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி லாரி உரிமையாளா்களான வைத்தியநாதன், பூதப்பாண்டி மற்றும் ரேவதி உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா்கள் தரப்பில், இந்த விவகாரம் குறித்து ஆவின் அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளனா். அதில், பால் திருடப்படவும் இல்லை அதில் கலப்படமும் செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை போலீஸாரும் ஏற்றுக்கொண்டுள்ளனா். எனவே மனுதாரா்கள் மீதான விசாரணையை நிலுவையில் வைக்க வேண்டிய அவசியமில்லை என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, மனுதாரா்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை. எனவே, இந்த வழக்கை நிலுவையில் வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை எனக் கூறி, மனுதாரா்கள் உள்பட 28 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.