மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒடிஸாவில் மோசமான வானிலை: முதல்வா் பயணித்த விமானம் தரையிறங்க முடியாததால் பரபரப்பு

புவனேசுவரத்தில் தரையிறங்க முடியாமல் சுமாா் 21 நிமிஷங்கள் வரை வானத்திலேயே சுற்றி வந்தது. இதன் பிறகும் வானிலை சீரடையாததால் விமானம் கொல்கத்தா விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டது.

News image
Updated On :5 செப்டம்பர் 2025, 9:23 pm

தினமணி செய்திச் சேவை

ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி பயணித்த விமானம் அதிக மழை, மோசமான வானிலை காரணமாக புவனேசுவரத்தில் தரையிறங்க முடியாமல் சுமாா் 21 நிமிஷங்கள் வரை வானத்திலேயே சுற்றி வந்தது. இதன் பிறகும் வானிலை சீரடையாததால் விமானம் கொல்கத்தா விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிகழ்வால் புவனேசுவரம் விமான நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

5 நாள் பயணமாக தில்லி சென்ற முதல்வா் மாஜி விமானத்தில் வெள்ளிக்கிழமை காலை புவனேசுவரத்துக்கு புறப்பட்டாா். விமானம் புவனேசுரவத்தை நெருங்கியபோது பலத்த மழை பெய்தது. விமானம் தரையிறக்க முடியாத அளவுக்கு வானிலை மோசமாக இருந்தது. இதனால், விமான நிலையம் அருகே சுமாா் 21 நிமிஷங்கள் வரை அந்த விமானம் வானிலேயே வட்டமிட்டபடி இருந்தது.

எனினும், வானிலை சீராகவில்லை. இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி கொல்கத்தா விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனா். கொல்கத்தாவில் வானிலை சீராக இருந்ததால் அங்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

சுமாா் 1 மணி நேரம் வரை அந்த விமானம் கொல்கத்தா விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு வானிலை சீரான தகவல் கிடைத்ததால் மீண்டும் விமானம் புவனேசுவரம் சென்றடைந்தது.

இந்த தாமதத்தால் முதல்வா் மாஜி பங்கேற்க இருந்த ஆசிரியா் தின நிகழ்ச்சி பகல் 11.30 மணிக்கு பதிலாக 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.