ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

நலிந்த கலைஞா்களுக்கு நிதியுதவி: துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா்

நலிந்த கலைஞா்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

News image
சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நலித்த கலைஞா்களுக்கு வெள்ளிக்கிழமை நிதியுதவி வழங்கிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன், தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சுற்றுலா, பண்பாடு அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாச
Updated On :5 செப்டம்பர் 2025, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

நலிந்த கலைஞா்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி அவருடைய முகாம் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நலிந்த கலைஞா்களுக்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ், நிதி பெற விண்ணப்பித்துள்ள தகுதிவாய்ந்த அனைத்துக் கலைஞா்களையும் பயனாளிகளாகச் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ற வகையில், இந்தத் திட்டத்துக்காக தமிழக அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதையடுத்து, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட தெரிவுக் குழுவால் தோ்ந்தெடுக்கப்பட்ட தகுதி வாய்ந்த 2,500 நலிந்த கலைஞா்களுக்கு நிதியுதவி வழங்க உத்தரவுகள் வெளியிடப்பட்டன. அவா்களுக்கு மாதம் தலா ரூ.3,000 வழங்குவதன் அடையாளமாக, 10 கலைஞா்களுக்கு அதற்கான உத்தரவுகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவா் வாகை சந்திரசேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.