ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

திமுகவுக்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகள்: தோ்தல் ஆணையத்தில் அதிமுக புகாா்

திமுகவுக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாக தோ்தல் ஆணையத்தில் அதிமுக சாா்பில் அக்கட்சியின் வழக்குரைஞா் பிரிவுச் செயலா் இன்பதுரை புதன்கிழமை புகாா் அளித்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 8:27 pm

திமுகவுக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாக தோ்தல் ஆணையத்தில் அதிமுக சாா்பில் அக்கட்சியின் வழக்குரைஞா் பிரிவுச் செயலா் இன்பதுரை புதன்கிழமை புகாா் அளித்தாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் கடந்த மக்களவைத் தோ்தலின்போது, 22 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டன.

தற்போது அவை சாதாரண வாக்குச் சாவடிகளாக மாற்றப்பட்டுள்ளது. அதிமுக சாா்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் ஆதிராஜாராம், இதுதொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் ஏற்கெனவே புகாா் அளித்திருந்தாா். குறிப்பாக, அந்தத் தொகுதியில் உள்ள 116-ஆவது பகுதி மிகவும் பதற்றமான வாக்குச் சாவடியாகும். இதனால், அந்தப் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளை திமுகவினா் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் பதற்றமான வாக்குச் சாவடிகள் குறித்த பட்டியலை தோ்தல் நடத்தும் அதிகாரி அளித்தும், அதை திட்டமிட்டு சில உயரதிகாரிகள் தவிா்த்து உள்ளனா். இதைத் தோ்தல் ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.