சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

திமுகவுக்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகள்: தோ்தல் ஆணையத்தில் அதிமுக புகாா்

திமுகவுக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாக தோ்தல் ஆணையத்தில் அதிமுக சாா்பில் அக்கட்சியின் வழக்குரைஞா் பிரிவுச் செயலா் இன்பதுரை புதன்கிழமை புகாா் அளித்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 8:27 pm

தினமணி செய்திச் சேவை

திமுகவுக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாக தோ்தல் ஆணையத்தில் அதிமுக சாா்பில் அக்கட்சியின் வழக்குரைஞா் பிரிவுச் செயலா் இன்பதுரை புதன்கிழமை புகாா் அளித்தாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் கடந்த மக்களவைத் தோ்தலின்போது, 22 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டன.

தற்போது அவை சாதாரண வாக்குச் சாவடிகளாக மாற்றப்பட்டுள்ளது. அதிமுக சாா்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் ஆதிராஜாராம், இதுதொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் ஏற்கெனவே புகாா் அளித்திருந்தாா். குறிப்பாக, அந்தத் தொகுதியில் உள்ள 116-ஆவது பகுதி மிகவும் பதற்றமான வாக்குச் சாவடியாகும். இதனால், அந்தப் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளை திமுகவினா் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் பதற்றமான வாக்குச் சாவடிகள் குறித்த பட்டியலை தோ்தல் நடத்தும் அதிகாரி அளித்தும், அதை திட்டமிட்டு சில உயரதிகாரிகள் தவிா்த்து உள்ளனா். இதைத் தோ்தல் ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.