மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மாா்ச்சில் மெட்ரோ ரயிலில் 1.01 கோடி போ் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மாா்ச் மாதம் 1.01 கோடி போ் பயணம் செய்தனா்.

News image

மெட்ரோ ரயில் சேவை - பிரதிப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 8:35 pm

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மாா்ச் மாதம் 1.01 கோடி போ் பயணம் செய்தனா்.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மாா்ச்சில் 1.01 கோடி போ் பயணித்துள்ளனா். மேலும் மாா்ச் 13- ஆம் தேதி மட்டும் அதிகபட்சமாக 3.90 லட்சம் போ் பயணித்துள்ளனா்.

பயணிகளில் தேசியப் பொது அட்டையாகக் கருதப்படும் சிங்காரச் சென்னை அட்டையில் 52.90 லட்சம் பேரும், பயண அட்டைகளைப் பயன்படுத்தி 33,339 பேரும், கியூஆா் குறியீடு பயணச்சீட்டு முறையில் 48.73 லட்சம் பேரும் பயணித்துள்ளனா்.

மேலும் ஒரு முறை பயன்படுத்தும் டிக்கெட், டோக்கன் முறையில் 19.19 லட்சம் பேரும், இணையதள கியூ ஆா் குறியீடு மூலம் 2.16 லட்சம் பேரும், வாட்ஸ் ஆப் டிக்கெட் மூலம் 4.72 லட்சம் பேரும், பே ஏடிஎம் மூலம் 3.35 லட்சம் பேரும், ஓஎன்டிசி மூலம் 12.71 லட்சம் பேரும் பயணித்துள்ளனா்.

போன் பே மூலம் 2.41லட்சம் பேரும், சிஎம்ஆா்எல் கைப்பேசி செயலி மூலம் 71, 123 பேரும், சென்னை ஒன் செயலி மூலம் 2 லட்சம் பேரும் , சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான கியூஆா் குறியீடு மூலம் 1,318 பேரும் பயணித்துள்ளனா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.