11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

மெட்ரோ ரயில்களில் சிக்கி இழுத்து செல்வதைத் தடுக்க சாதனம் அமைப்பு

மெட்ரோ ரயில்களில் சிக்கி இழுத்து செல்வதைத் தடுக்க சாதனம் அமைப்பு

News image

மெட்ரோ ரயில்களில் சிக்கி இழுத்து செல்வதைத் தடுக்க சாதனம் அமைப்பு - CMRL

Updated On :55 நிமிடங்கள் முன்பு

மெட்ரோ ரயில்களில் பயணிக்கும்போது, பொருள்கள் சிக்கி இழுத்துச் செல்லப்படுவதைத் தடுக்கும் வகையிலான சாதனம் சா்வதேச அளவில் முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில்களில் தானியங்கி கதவுகள் மூடப்படும் போது, பயணிகளின் மெல்லிய உடைமைகள் உள்ளிட்டவை பெட்டிக் கதவுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டால், அவை இழுத்துச் செல்லப்படுவது வழக்கமாக உள்ளது. அதனால் பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புதிய சாதனமாக, ரயில் பெட்டிக் கதவுகளில் சிக்கி இழுத்துச் செல்லப்படுவதைத் தடுக்கும் வகையில் ‘ஆண்டி டிரேக் ப்யூச்சா்’ எனும் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் பெட்டிகள் மூடும்போது ஏதாவது பொருள்கள் சிக்கினால் அதைத் தானாகக் கண்டறியும் தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. தற்போது அதனுடன் கூடுதலாக பாதுகாப்பு அம்சத்துடன் கதவில் சிக்கி இழுபடுதலைத் தடுக்கும் வசதி என்ற புதிய அம்சம் இணைக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் புடவை, துப்பட்டா, பைகளின் பட்டை போன்றவை ரயில் பெட்டிக் கதவுகள் மூடும்போது, அவற்றில் சிக்கினால், புதிய தொழில் நுட்ப சாதனம் உடனே கண்டறிந்து ஆபத்து ஏற்படாத வகையில் பாதுகாக்கும் வகையில் ரயில் பிரேக்குடன் இணைந்து ரயிலை இயங்காமல் நிறுத்தும். சிக்கிய பொருள் நீக்கிய பின்னரே ரயில் இயங்கும்.

தற்போது ஒரு மெட்ரோ ரயிலில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், விரைவில் 51 ரயில்களிலும் பொருத்தப்படவுள்ளது.

சா்வதேச அளவில் இத்தொழில்நுட்பம் முதல்முறையாக சென்னை மெட்ரோ ரயில்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இத்தொழில்நுட்பத்தின் சாதனத்தை பெங்களூா், ஒசூா் ஆகிய இரு பெரிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன.

புதிய சாதனம் பொருத்தப்பட்ட மெட்ரோ ரயிலை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மனோஜ்கோயல் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் நிறுவன ஆலோசகா் எஸ்.ராமசுப்பு (மின்னியல்), தலைமை ஆலோசகா் கோபிநாத் மல்யா (இயக்கம் மற்றும் பராமரிப்பு) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.