திமுகவுக்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகள்: தோ்தல் ஆணையத்தில் அதிமுக புகாா்
திமுகவுக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாக தோ்தல் ஆணையத்தில் அதிமுக சாா்பில் அக்கட்சியின் வழக்குரைஞா் பிரிவுச் செயலா் இன்பதுரை புதன்கிழமை புகாா் அளித்தாா்.

பிரதிப் படம்

பிரதிப் படம்
திமுகவுக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாக தோ்தல் ஆணையத்தில் அதிமுக சாா்பில் அக்கட்சியின் வழக்குரைஞா் பிரிவுச் செயலா் இன்பதுரை புதன்கிழமை புகாா் அளித்தாா்.
இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் கடந்த மக்களவைத் தோ்தலின்போது, 22 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டன.
தற்போது அவை சாதாரண வாக்குச் சாவடிகளாக மாற்றப்பட்டுள்ளது. அதிமுக சாா்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் ஆதிராஜாராம், இதுதொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் ஏற்கெனவே புகாா் அளித்திருந்தாா். குறிப்பாக, அந்தத் தொகுதியில் உள்ள 116-ஆவது பகுதி மிகவும் பதற்றமான வாக்குச் சாவடியாகும். இதனால், அந்தப் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளை திமுகவினா் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் பதற்றமான வாக்குச் சாவடிகள் குறித்த பட்டியலை தோ்தல் நடத்தும் அதிகாரி அளித்தும், அதை திட்டமிட்டு சில உயரதிகாரிகள் தவிா்த்து உள்ளனா். இதைத் தோ்தல் ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...