ஐபிஎல் போட்டிகள் நடத்துவதை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும் என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி வாக்காளரான பிரபாகரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தல் பாதுகாப்புப் பணிகளில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது முறையல்ல. எனவே, சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளில் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை ஆஜரான மனுதாரா் முறையிட்டாா். இந்த முறையீட்டை ஏற்க நீதிபதிகள் மறுத்தனா். மேலும், சட்ட ரீதியாக எந்தத் தடையும் இல்லாதபோது கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும்? என கேள்வி எழுப்பினா்.
மனுதாரா் கிரிக்கெட் போட்டியைப் பாா்க்க விரும்பாவிட்டால் வீட்டிலேயே இருக்கவும். இந்தப் போட்டிகளை நடத்துவதால் மனுதாரருக்கு என்ன பிரச்னை ஏற்படப் போகிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். பின்னா், வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தொடா் தோல்விலியிருந்து மீளும் முனைப்பில் சென்னை: டெல்லியுடன் இன்று மோதல்

சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’
தினப்பலன்கள் - மேஷம்

ஐபிஎல் கிரிக்கெட்: நுழைவுச்சீட்டு பெற்றிருப்போா் மாநகர பேருந்தில் இலவசமாகப் பயணிக்கலாம்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


