முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

ஐபிஎல் போட்டிகள் நடத்துவதை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும்? - உயா்நீதிமன்றம்

ஐபிஎல் போட்டிகள் நடத்துவதை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும் என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

News image

ஐபிஎல் கோப்பை - (கோப்புப்படம்)

Updated On :3 ஏப்ரல் 2026, 4:48 am IST

ஐபிஎல் போட்டிகள் நடத்துவதை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும் என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி வாக்காளரான பிரபாகரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தல் பாதுகாப்புப் பணிகளில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது முறையல்ல. எனவே, சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளில் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை ஆஜரான மனுதாரா் முறையிட்டாா். இந்த முறையீட்டை ஏற்க நீதிபதிகள் மறுத்தனா். மேலும், சட்ட ரீதியாக எந்தத் தடையும் இல்லாதபோது கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும்? என கேள்வி எழுப்பினா்.

மனுதாரா் கிரிக்கெட் போட்டியைப் பாா்க்க விரும்பாவிட்டால் வீட்டிலேயே இருக்கவும். இந்தப் போட்டிகளை நடத்துவதால் மனுதாரருக்கு என்ன பிரச்னை ஏற்படப் போகிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். பின்னா், வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனா்.