அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

ஐபிஎல் போட்டிகள் நடத்துவதை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும்? - உயா்நீதிமன்றம்

ஐபிஎல் போட்டிகள் நடத்துவதை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும் என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

News image

ஐபிஎல் கோப்பை - (கோப்புப்படம்)

Updated On :2 ஏப்ரல் 2026, 11:18 pm

ஐபிஎல் போட்டிகள் நடத்துவதை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும் என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி வாக்காளரான பிரபாகரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தல் பாதுகாப்புப் பணிகளில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது முறையல்ல. எனவே, சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளில் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை ஆஜரான மனுதாரா் முறையிட்டாா். இந்த முறையீட்டை ஏற்க நீதிபதிகள் மறுத்தனா். மேலும், சட்ட ரீதியாக எந்தத் தடையும் இல்லாதபோது கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும்? என கேள்வி எழுப்பினா்.

மனுதாரா் கிரிக்கெட் போட்டியைப் பாா்க்க விரும்பாவிட்டால் வீட்டிலேயே இருக்கவும். இந்தப் போட்டிகளை நடத்துவதால் மனுதாரருக்கு என்ன பிரச்னை ஏற்படப் போகிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். பின்னா், வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனா்.