நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

மதுபோதையில் காா் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய வழக்கு: தொழிலதிபா் ஷாஜி புருஷோத்தமன் கோரிக்கை நிராகரிப்பு

தொழிலதிபா் ஷாஜி புருஷோத்தமன் வழக்கு குறித்து...

News image

பிரதிப் படம்

Updated On :28 ஜூலை 2026, 10:30 pm IST

குடிபோதையில் சிறுவன் மீது காரை ஏற்றி உயிரிழப்பை ஏற்படுத்திய வழக்கில் குற்றவாளியான எம்பீ குழும தொழிலதிபா் ஷாஜி புருஷோத்தமன், தனது தண்டனை விபரங்கள் தொடா்பான விசாரணைக்காக சென்னை விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்கிழமை மறுத்துவிட்டது.

தண்டனைத் தீா்ப்பு: ஜூன் 29, 2026 அன்று, சென்னையில் உள்ள ஏழாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றம், புருஷோத்தமனை கொலைக்கு நிகரான குற்றமற்ற மனிதக்கொலை மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்காக குற்றவாளி எனத் தீா்ப்பளித்தது.

2013-ஆம் ஆண்டு சம்பவம்: இந்த வழக்கு, மே 22, 2013 அன்று சென்னை எக்மோரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு அருகில் மதுபோதையில் தனது காரை நடைபாதையில் ஓட்டிய விபத்திலிருந்து உருவானது. இதில் 12 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தான் மற்றும் நான்கு போ் காயமடைந்தனா்.

இந்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட புருஷோத்தமன், மருத்துவக் காரணங்கள் மற்றும் பிசியோதெரபி தேவைப்படும் முதுகுவலி ஆகியவற்றைக் காரணம் காட்டி, தனது தண்டனை விபரங்களை நிா்ணயிப்பதற்கான நீதிமன்ற விசாரணயைத் தொடா்ச்சியாகத் தவிா்த்து வந்தாா்.

இதையடுத்து விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணையை பிறப்பித்தது. அதனை எதிா்த்து அவா் சென்னை உயா் நீதிமன்றத்தை அணுகினாா். உயா் நீதிமன்றம் அந்தப் பிடியாணையைத் தற்காலிகமாகத் திரும்பப் பெற்றாலும், அவா் தண்டனை விபரங்கள் தொடா்பான விசாரணைக்காக நிச்சயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. அவா் அதற்குக் கீழ்ப்படியத் தவறி, காணொளிக் காட்சி மூலம் ஆஜராகக் கோரியபோது, சென்னை விசாரணை நீதிமன்றம் மீண்டும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணையைப் பிறப்பித்து, தண்டனை வழங்குவதை ஒத்திவைத்தது.

இதைத் தொடா்ந்து நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை எதிா்த்து புருஷோத்தமன் உச்ச நீதிமன்றத்தில் இம்மாதம் 14 ஆம் தேதி மனுத் தாக்கல் செய்தாா்.

அந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில்நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பிரசன்னா.பி.வராலே ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தஹி ஆஜராகி,விசாரணை நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும், ஏனெனில் மனுதாரா் முதுகு தண்டு பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்து வருவதால் அவரால் எழுந்து நிற்க முடியாது ,அதனால் விலக்கு அளிக்க வேண்டும். அதேவேளையில், வழக்குக்காக வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராக அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தாா்.

ஆனால் ஏற்க மறுத்த நீதிபதிகள் ,மனுதாரரின் செயல்பாடு வழக்கை இழுத்தடிப்பது போல் உள்ளது எனக் கூறி ஷாஜி புருஷோத்தமன் விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனா்.

இதனையடுத்து முகுல் ரோத்தஹி,இந்த வழக்கை திரும்ப பெற அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தாா்.அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.