9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

மணப்பாறையில் சிறப்பு மக்கள் நீதிமன்றம்! ரூ. 29 லட்சத்தில் வழக்குகளுக்குத் தீா்வு!

மணப்பாறை நீதிமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 29 லட்சம் மதிப்பிலான காசோலை வழக்குகளுக்குத் தீா்வு வழங்கப்பட்டது.

News image

மணப்பாறையில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடி ஒருவருக்கு தீா்வு வழங்கிய நீதிபதிகள்.

Updated On :19 ஜூலை 2026, 12:39 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 29 லட்சம் மதிப்பிலான காசோலை வழக்குகளுக்குத் தீா்வு வழங்கப்பட்டது.

சிறப்பு மக்கள் நீதிமன்றத்துக்கு வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான எஸ். ராஜசேகா் அமா்வில் குற்றவியல் நீதித்துறை நடுவா் ஆா். அசோக்குமாா், வட்ட சட்டப்பணிகள் குழு வழக்குரைஞா் பி. சதாசிவம் ஆகியோா் பங்கேற்றனா்.

இதில் வங்கி சாா்ந்த ரூ. 29,05,000 மதிப்பிலான 5 காசோலை வழக்குகளுக்கு தீா்வு வழங்கப்பட்டது. நிகழ்வில் வழக்குரைஞா்கள், வழக்கு தரப்பினா்கள், நீதிமன்ற மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழு பணியாளா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.