ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

ஐபிஎல் போட்டிகள் 74-லிருந்து 94-ஆக உயர்த்தப்படுமா? பிசிசிஐ விளக்கம்!

அடுத்தாண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் 74-லிருந்து 94-ஆக உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு பிசிசிஐ செயலர் அளித்த விளக்கம் பற்றி...

News image

ஐபிஎல் கோப்பை - படம்: எக்ஸ் / ஐபிஎல்.

Updated On :18 ஜூன் 2026, 3:06 pm IST

அடுத்தாண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் 74-லிருந்து 94-ஆக உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு பிசிசிஐ செயலர் தேவஜித் சாய்கியா வியாழக்கிழமை (ஜூன் 18) விளக்கமளித்தார்.

ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் நடைபெறும் 70 போட்டிகள் முடிந்த பிறகு, புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும். பிளே ஆஃப் சுற்றில் தகுதிச்சுற்று, எலிமினேட்டர், இறுதிப்போட்டி என 4 போட்டிகள் நடக்கும்.

இதன் மூலம் ஒரு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் போட்டிகளையும் சேர்த்து மொத்தம் 74 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த நடைமுறையை மாற்றி மொத்தம் 94 போட்டிகள் நடத்த திட்டமிட்டு வருவதாக ஐபிஎல் சேர்மன் அருண் துமால் தெரிவித்திருந்தார்.

இது குறித்து பிசிசிஐ செயலர் தேவஜித் சாய்கியா பேசியதாவது:

போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதைப் பொறுத்தவரை, அது தற்போதைக்கு சாத்தியமில்லை. ஏனெனில் வீரர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து வருவதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த இரண்டு மாத கால அவகாசத்தைப் பெறுவதற்கே மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறோம்.

இந்த நிலையில், மேலும் போட்டிகள் அதிகரித்தால் நாள்களும் நீடிக்கும். இது ஒரு கடினமான சூழலை உருவாக்கும். ஏனென்றால் மற்ற நாட்டு வீரர்கள் அவர்களுடைய தேசத்தின் அணிக்காகவும் விளையாட வேண்டும். இதனால், சர்வதேச போட்டிகளுக்கான அட்டவணைகள் மாறும்.

அதனால், இந்த நேரத்தில் போட்டிகளின் எண்ணிக்கையை 74-லிருந்து 94-ஆக அதிகரிப்பது குறித்த எந்த விவாதமும் நடைபெறவில்லை. அப்படியிருந்தாலும் இது உடனடியாக நடக்கப்போவதும் இல்லை. வரும் ஆண்டுகளில் நிலைமை எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்தத் தருணத்தில் போட்டிகளில் எண்ணிக்கையை 74-லிருந்து 94-ஆக உயர்த்துவதற்கான எந்த சூழலையும் நான் காணவில்லை.

ஏனென்றால், இதற்கு இந்தியாவை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது. மாறாக ஐசிசியின் மற்ற கிரிக்கெட் நாடுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா. மேற்கிந்தியா ஆகிய நாடுகளின் வீரர்களும் இந்தத் தொடரில் விளையாடுகின்றனர் என்று தேவஜித் சாய்கியா தெரிவித்தார்.

Summary

BCCI Secretary Devajit Saikia clarified on Thursday (June 18) whether the number of IPL matches would be increased from 74 to 94 starting next year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.