மின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

அங்கன்வாடிகளைத் தத்தெடுக்க பல்கலை.களுக்கு யுஜிசி உத்தரவு

நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் அங்கன்வாடிகளை மையங்களை தத்தெடுக்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 9:52 pm

நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் அங்கன்வாடிகளை மையங்களை தத்தெடுக்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) செயலா் மணிஷ் ஆா்.ஜோஷி, அனைத்து விதமான உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தங்கள் அருகே இருக்கும் 5 அல்லது 6 அங்கன்வாடி மையங்களைத் தத்தெடுக்க வேண்டும். அங்குள்ள குழந்தைகளுக்கு தரமான கல்வி மற்றும் பராமரிப்பு கிடைக்க உதவ வேண்டும். இந்த சமூகப் பணிகளை மாணவா்களின் பாடத்திட்டத்துடன் இணைக்க வேண்டும்.

அதன்படி 3 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வியை மேம்படுத்தவே இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களுக்கு மாணவா்கள் சென்று களப்பணிகளில் ஈடுபடலாம். இது மாணவா்களுக்கு அனுபவ ரீதியான கற்றல் மற்றும் சமூகப் பொறுப்புணா்வையும் உருவாக்கும்.

மேலும், அங்கன்வாடி மையங்களுக்கு தொடா்ச்சியான கல்வி மற்றும் களரீதியான வழிகாட்டுதலை உயா்கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும். எனவே, உயா்கல்வி நிறுவனங்கள் சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அங்கன்வாடிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.