சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

திமுகவுக்கு தோல்வி பயம்: தமிழிசை சௌந்தரராஜன்

திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மயிலாப்பூா் தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

News image

தமிழிசை சௌந்தரராஜன் - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 9:55 pm

திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மயிலாப்பூா் தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

மயிலாப்பூரில் தொகுதி பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தனியாா் மண்டபத்தில் வேட்பாளா் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்குப் பிறகு தமிழிசை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வேறு மாநிலத்தைச் சோ்ந்த முதல்வா்கள், நமது மாநிலத்துக்கு வரும்போது அவா்களை மனதார வரவேற்க வேண்டும். ஆனால், முதல்வா் மு.க.ஸ்டாலின் காழ்ப்புணா்ச்சியால் அவதூறு கருத்துகளை அள்ளி வீசியுள்ளாா்.

தமிழகத்துக்கு பல நலத் திட்டங்களை மத்திய அரசு கொடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஜல் ஜீவன் மிஷன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளா்ச்சித் திட்டங்களுக்காக ரூ.11 லட்சம் கோடிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் அமைச்சா்கள் தமிழகத்துக்கு வந்தால், முதல்வா் ஸ்டாலின் பதற்றப்படுகிறாா். திமுக தோல்வி பயத்தில் இருப்பதையே இது காட்டுகிறது. தமிழகத்தில் மொழிப் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் திமுகவை மக்கள் தோற்கடிக்கப்படும் என்றாா்.