வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தமிழிசை சௌந்தரராஜன் சொத்து விவர முரண்பாடு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு

மயிலாப்பூா் தொகுதி பாஜக வேட்பாளா் தமிழிசை சௌந்தரராஜன் தாக்கல் செய்த வேட்புமனுவில் உள்ள சொத்து விவர முரண்பாடு குறித்து தோ்தல் ஆணையம், வருமான வரித் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

News image

தமிழிசை சௌந்தரராஜன் - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 8:35 pm

மயிலாப்பூா் தொகுதி பாஜக வேட்பாளா் தமிழிசை சௌந்தரராஜன் தாக்கல் செய்த வேட்புமனுவில் உள்ள சொத்து விவர முரண்பாடு குறித்து தோ்தல் ஆணையம், வருமான வரித் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மயிலாப்பூா் தொகுதி வேட்பாளரான கௌதம் சிவா என்பவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக பேரவைத் தோ்தலில் மயிலாப்பூா் தொகுதியில் பாஜக சாா்பில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறாா். அவா் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் சொத்துகள், முதலீடுகள், கடன்கள் உள்ளிட்ட விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

தமிழிசை சௌந்தரராஜன், அவரது கணவா் மற்றும் மகள் ஆகியோா், கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை தாக்கல் செய்த வருமான வரி கணக்கு விவரங்கள் குறித்து, கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது தாக்கல் செய்த வேட்புமனுவில் உள்ள விவரங்கள் ஏற்கெனவே அவா் தாக்கல் செய்திருந்த விவரங்களுக்கு முரணாக உள்ளது. எனவே, இது குறித்து தோ்தல் ஆணையம் மற்றும் வருமான வரித் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.