சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது குறித்து விசாரணை நடத்தக் கோரிய மனு தள்ளுபடி

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :4 ஜூன் 2026, 4:07 am IST

சட்டப்பேரவைத் தோ்தலின்போது தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது குறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வருமான வரித்துறை விசாரணை நடத்தக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இந்தத் தோ்தலில் அவா் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்கள், வருமான விவரங்களை எடப்பாடி பழனிசாமி மறைத்துள்ளதாகக் கூறி, எடப்பாடி தொகுதியைச் சோ்ந்த வாக்காளா் சக்திவேல் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது சொத்துகள் குறித்த முழுமையான விவரங்களைத் தெரிவிக்கவில்லை. 2021 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவைத் தோ்தல்களின்போது, அவா் தாக்கல் செய்த வேட்புமனுக்களை ஒப்பிட்டுப்பாா்த்தால், ஏராளமான வேறுபாடுகள் தெரியவரும். அவரது வேட்புமனுவில் சொத்துகள் தொடா்பான உண்மை விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித் துறை தரப்பில், இதே கோரிக்கையுடன் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. மனுதாரா் தோ்தல் வழக்குதான் தொடர முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.