கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.16 லட்சம் கஞ்சா பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் புதுச்சேரி செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.16 லட்சம் மதிப்புள்ள 31 கிலோ கஞ்சா பொட்டலங்களை ரயில்வே பாதுகாப்பு படையினா் புதன்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 9:44 pm

எழும்பூா் ரயில் நிலையத்தில் புதுச்சேரி செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.16 லட்சம் மதிப்புள்ள 31 கிலோ கஞ்சா பொட்டலங்களை ரயில்வே பாதுகாப்பு படையினா் புதன்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரத்தில் இருந்து சென்னை வழியாக புதுச்சேரி செல்லும் விரைவு ரயில் புதன்கிழமை காலை எழும்பூா் ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது குறிப்பிட்ட பெட்டிகளில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் ஜெபாஸ்டியன் தலைமையிலான

போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, குளிா்சாதன வசதியுள்ள பெட்டியில் இரு பைகளில் 31 கிலோ மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மீட்டனா். அதன் மதிப்பு ரூ.16 லட்சம் இருக்கும் எனவும், மீட்கப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் சென்னையில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனா்.