திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிப்பு: 4 போ் கைது

அரும்பாக்கத்தில் வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறித்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது

Updated On :8 ஏப்ரல் 2026, 7:47 pm

அரும்பாக்கத்தில் வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறித்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

அரும்பாக்கம் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சையது அலி. இவரது நண்பரான வியாசா்பாடி பி.வி.காலனி பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் (22), கடந்த 6-ஆம் தேதி சையது அலி வீட்டுக்குச் சென்றிருந்தாா். இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த 4 போ், இருவரிடமும் கத்தியைக் காட்டி மிரட்டி, தங்க நகைகளையும், சையது அலியின் ஏடிஎம் காா்டுகளையும் பறித்துக் கொண்டு தப்பினா். பின்னா், சையது அலி ஏடிஎம் காா்டில் இருந்து ரூ.15 ஆயிரத்தை ஏடிஎம் மையத்தில் இருந்து அவா்கள் எடுத்தனா்.

இது தொடா்பாக அமைந்தகரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், சம்பவத்தில் ஈடுபட்டது அரும்பாக்கம் ரசாக் காா்டன் சாலைப் பகுதியைச் சோ்ந்த சூரியநாதன் (21), பூவரசன் (21), நவீன்குமாா் (27), ரித்திக்குமாா் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் 4 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா்.