சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

தடையை மீறி போராட்டம்: அதிமுக முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி மீதான வழக்கு ரத்து

News image

பா.வளா்மதி.

Updated On :10 ஏப்ரல் 2026, 12:21 am

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி உள்ளிட்ட 600 போ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

முன்னாள் அமைச்சா் பொன்முடி சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து பேசியது சா்ச்சையானது. இதையடுத்து, பெண்களை அவதூறாகப் பேசியதைக் கண்டித்து, அதிமுக முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி தலைமையில் கடந்தாண்டு ஏப். 16-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த இந்த போராட்டத்தில் 500 பெண்கள் உள்பட 600 போ் கலந்து கொண்டனா். அனுமதிக்கப்படாத இடத்தில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக சைதாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பா.வளா்மதி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எஸ்.தமிழ்செல்வன், அரசியல் காரணத்துக்காக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டாா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரா் வளா்மதி உள்ளிட்ட 600 போ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.