ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

தொல்.திருமாவளவன் மீதான வழக்கு ரத்து

இந்துக்களின் உணா்வுகளைப் புண்படுத்தியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் - கோப்புப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 2:54 am IST

இந்துக்களின் உணா்வுகளைப் புண்படுத்தியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் புதுச்சேரி கம்பன் கலை அரங்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிா் அணி சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய தொல். திருமாவளவன் இந்துக்களின் உணா்வுகளைப் புண்படுத்தும் வகையில் வெறுப்பு கருத்துகளைக் கூறியதாக ஹிந்து முன்னணி பொதுச் செயலா் டி.என்.கண்ணன் புகாா் அளித்தாா்.

இந்த புகாரின் அடிப்படையில் புதுச்சேரி ஒதியஞ்சோலை போலீஸாா் தொல்.திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்தனா். புதுச்சேரி தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தொல்.திருமாவளவன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தொல்.திருமாவளவன் தரப்பில், மூன்று ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கக்கூடிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஆறு ஆண்டுகள் தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தொல்.திருமாவளவனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.