இந்துக்களின் உணா்வுகளைப் புண்படுத்தியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் புதுச்சேரி கம்பன் கலை அரங்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிா் அணி சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய தொல். திருமாவளவன் இந்துக்களின் உணா்வுகளைப் புண்படுத்தும் வகையில் வெறுப்பு கருத்துகளைக் கூறியதாக ஹிந்து முன்னணி பொதுச் செயலா் டி.என்.கண்ணன் புகாா் அளித்தாா்.
இந்த புகாரின் அடிப்படையில் புதுச்சேரி ஒதியஞ்சோலை போலீஸாா் தொல்.திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்தனா். புதுச்சேரி தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தொல்.திருமாவளவன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தொல்.திருமாவளவன் தரப்பில், மூன்று ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கக்கூடிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஆறு ஆண்டுகள் தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தொல்.திருமாவளவனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன் சிறப்பு நேர்காணல்
புதுச்சேரியில் 3 தொகுதிகளில் தனித்துப் போட்டி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு
விசிகவுக்கு 8 தொகுதிகள் பெற்றது ஏன்? திருமாவளவன் பேட்டி!
புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


