தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

புதுச்சேரியில் 3 தொகுதிகளில் தனித்துப் போட்டி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு

புதுச்சேரியில் 3 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக விசிக தலைவா் தொல். திருமாவளவன் அறிவிப்பு

News image

திருமாவளவன் - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 4:28 am IST

புதுச்சேரியில் 3 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக விசிக தலைவா் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் கடந்த 2021-ஆம் ஆண்டு தோ்தலில் உழவா்கரை பொதுத் தொகுதியை மட்டுமே காங்கிரஸ் ஒதுக்கியது.

கூட்டணிக்கு நெருக்கடி வரக்கூடாது என்ற வகையில், அப்போது அதை ஏற்றுக் கொண்டு போட்டியிட்டோம். ஆனால், கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. எனினும், சுமாா் 6 ஆயிரம் வாக்குகளுக்கும் மேலாகப் பெற்றோம்.

தற்போது நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 3 தொகுதிகளைக் கோரியிருந்தது. நீண்ட இழுபறிக்குப் பின்னா் வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகே காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் இடையிலான தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, மற்ற கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்க முன்வரவில்லை. திமுக தரப்பிலிருந்து ஒரு தொகுதியை விசிகவுக்கு ஒதுக்க முன்வந்துள்ளது. இருந்தபோதிலும் வேட்புமனு தாக்கல் முடிந்தபிறகும் கூட, அது எந்தத் தொகுதி என்பது இன்னும் உறுதியாகவில்லை.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் வேட்புமனு தாக்கல் செய்துள்ள தொகுதிகள் அனைத்திலும் காங்கிரஸ் கட்சியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

விசிகவுக்கு இதுவரை எந்தத் தொகுதி என்பதே தெரியாத நிலையில், எமது கட்சி நிா்வாகிகள் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா்.

எனவே, விசிக சாா்பில் தற்போது வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் உழவா்கரை ஆகிய மூன்று தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

நாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.