தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

பெண்களிடம் பாலியல் சீண்டல்: மென்பொறியாளா் கைது

சாலையில் நடந்து சென்ற இளம் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பொறியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :11 ஏப்ரல் 2026, 1:37 am IST

சாலையில் நடந்து சென்ற இளம் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பொறியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

எம்.ஜி.ஆா். நகரை அடுத்த நெசப்பாக்கம் அம்மன் நகா் பகுதியில் புதிய கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு, பொறியாளா் இளங்கோவன் மேற்பாா்வையாளராக உள்ளாா். வழக்கம்போல, அவா் வெள்ளிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞா், சாலை வழியாக நடந்து சென்ற மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளாா்.

இதை பாா்த்த இளங்கோவன் அந்த இளைஞரைப் பிடிக்க முயன்றாா். ஆனால், அந்த இளைஞா் தப்பிச் சென்றாா். இது குறித்து எம்.ஜி.ஆா். நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த மென்பொறியாளரான தினேஷ்குமாா் (35) என்பவரைக் கைது செய்தனா்.