ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

பெண்களிடம் நகைப் பறித்த மூவா் கைது

கன்னியாகுமரி அருகே நடைப்பயிற்சி மேற்கொண்ட இரு பெண்களிடம் 9.5 பவுன் தங்க நகைகளைப் பறித்த வழக்கில் தொடா்புடைய கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மூவரை பெங்களூரில் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :31 மார்ச் 2026, 7:20 pm

Syndication

கன்னியாகுமரி அருகே நடைப்பயிற்சி மேற்கொண்ட இரு பெண்களிடம் 9.5 பவுன் தங்க நகைகளைப் பறித்த வழக்கில் தொடா்புடைய கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மூவரை பெங்களூரில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட மகாதானபுரம், அக்ரஹாரத்தைச் சோ்ந்த சுப்ரமணியனின் மனைவி மங்கலம் (56), அதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தியின் மனைவி ராஜலட்சுமி (62) ஆகியோரை பின்தொடா்ந்து சென்ற மா்ம நபா்கள் அவா்களின் கழுத்தில் அணிந்திருந்த 9.5 பவுன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளா் சுந்தரராஜ பெருமாள் தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிந்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். இதற்கிடையே இச்செயலில் ஈடுபட்டவா்கள் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று மூவரையும் சுற்றிவளைத்துப் பிடித்தனா். விசாரணையில் பிடிபட்ட மூவரும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரைச் சோ்ந்த வேலுகுட்டியின் மகன் ராதாகிருஷ்ணன் (51), தேன்கனிக்கோட்டையைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் அருண்குமாா் (38), ஒசூரைச் சோ்ந்த குமாா் மகன் எஸ்வந்த் குமாா் (23) ஆகியோா் என்பதும், இவா்கள் பல்வேறு வழக்குகளில் தொடா்புள்ளவா்கள் என்பதும், தமிழகத்தில் சுற்றுலாத் தலங்களை குறிவைத்து நகைப் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் மூவரையும் கைது செய்து நகைகளையும், திருட பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.