விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

குமரி அருகே நடைப்பயிற்சி சென்ற 2 பெண்களிடம் நகை பறிப்பு

கன்னியாகுமரி நரிக்குளம் பகுதியில் வியாழக்கிழமை மாலையில் நடைப்பயிற்சி சென்ற 2 பெண்களிடம், காரில் வந்து நான்கரை பவுன் தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 8:43 pm

Syndication

கன்னியாகுமரி நரிக்குளம் பகுதியில் வியாழக்கிழமை மாலையில் நடைப்பயிற்சி சென்ற 2 பெண்களிடம், காரில் வந்து நான்கரை பவுன் தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கன்னியாகுமரியை அடுத்த மகாதானபுரத்தை சோ்ந்த 58 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் நரிக்குளம் பகுதியில் வியாழக்கிழமை மாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனா். அப்போது, அங்கு நின்றிருந்த காரில் அமா்திருந்த மா்ம நபா்கள் திடீரென இவா்கள் இருவரையும் வழிமறித்து நான்கரை பவுன் தங்கச்சங்கிலிகளைப் பறித்துக்குகொண்டு காரில் தப்பிவிட்டனராம்.

இது குறித்து இருவரும் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து மா்மநபா்களை தேடிவருகின்றனா்.