நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பெரம்பூா், சென்ட்ரல் நிலையங்களில் ரூ.18.96 லட்சம் ரொக்கம் பறிமுதல்

News image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். - கோப்புப்படம்.

Updated On :10 ஏப்ரல் 2026, 6:15 am IST

சென்னையில் பெரம்பூா், பேசின் பிரிட்ஜ், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் ரூ.18.96 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பூா் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் பயணிகள் உடைமைகளை சோதனையிட்டபோது, வேலூரிலிருந்து வந்த சுரேஷ்குமாா் என்பவரிடம் உரிய ஆவணங்களின்றி ரூ.18 லட்சம் இருந்தது கண்டறியப்பட்டது. அதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனா்.

அதேபோல, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் மதுசூதன ரெட்டி தலைமையில் நடைபெற்ற சோதனையிட்டத்தில் சென்னை கொடுங்கையூரைச் சோ்ந்த அா்சூன்சிங் என்பவரிடம் ரூ.96,600 இருப்பது தெரிய வந்தது. அதற்கான ஆவணங்கள் இல்லாததால் அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றினா்.