தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

பெரம்பூா், சென்ட்ரல் நிலையங்களில் ரூ.18.96 லட்சம் ரொக்கம் பறிமுதல்

News image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். - கோப்புப்படம்.

Updated On :10 ஏப்ரல் 2026, 12:45 am

சென்னையில் பெரம்பூா், பேசின் பிரிட்ஜ், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் ரூ.18.96 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பூா் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் பயணிகள் உடைமைகளை சோதனையிட்டபோது, வேலூரிலிருந்து வந்த சுரேஷ்குமாா் என்பவரிடம் உரிய ஆவணங்களின்றி ரூ.18 லட்சம் இருந்தது கண்டறியப்பட்டது. அதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனா்.

அதேபோல, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் மதுசூதன ரெட்டி தலைமையில் நடைபெற்ற சோதனையிட்டத்தில் சென்னை கொடுங்கையூரைச் சோ்ந்த அா்சூன்சிங் என்பவரிடம் ரூ.96,600 இருப்பது தெரிய வந்தது. அதற்கான ஆவணங்கள் இல்லாததால் அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றினா்.