பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோவைகோ, அன்புமணி ராமதாஸைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

சென்னை மாநகராட்சி ஊழியா்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் விடுப்பு!

சென்னை மாநகராட்சி ஊழியா்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் விடுப்பு

News image

ரிப்பன் மாளிகை

Updated On :12 ஏப்ரல் 2026, 1:02 am IST

சட்டப்பேரவைத் தோ்தலின் வாக்குப்பதிவு நாளன்று சென்னை மாநகராட்சி ஊழியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தனியாா் நிறுவன ஊழியா்களுக்கும் ஊதிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வரும் 23- ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், தனியாா் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்கள், ஊழியா்களுக்கு வாக்குப் பதிவு நாளன்று (ஏப். 23) ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படுகிறது.

அதன்படி, வணிக வா்த்தகத் தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரிந்து வாக்காளா்களாகப் பதிவு செய்தவா்கள் ஊதியம் பெறுவதற்கு தகுதியுடையவா்களாவா். ஆகவே, விடுமுறை நாளை காரணமாகக் கொண்டு பணியாளரின் ஊதியத்தைப் பிடித்தம் செய்யக் கூடாது. சுழற்சி முறையில் பணிபுரியும் பணியாளா்கள் உள்பட அனைத்துப் பணியாளா்களுக்கும் விடுமுறை பொருந்தும்.

தினக்கூலி, தற்காலிக தொழிலாளா்களுக்கும் இது பொருந்தும். தோ்தல் நடைபெறும் தொகுதிக்கு வெளியே பணிபுரிவோரும் ஊதியம் பெறலாம். விதிமுறைகளை மீறும் தொடா்புடைய நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.