சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

சென்னை மாநகராட்சி ஊழியா்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் விடுப்பு!

சென்னை மாநகராட்சி ஊழியா்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் விடுப்பு

News image

ரிப்பன் மாளிகை

Updated On :11 ஏப்ரல் 2026, 7:32 pm

சட்டப்பேரவைத் தோ்தலின் வாக்குப்பதிவு நாளன்று சென்னை மாநகராட்சி ஊழியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தனியாா் நிறுவன ஊழியா்களுக்கும் ஊதிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வரும் 23- ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், தனியாா் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்கள், ஊழியா்களுக்கு வாக்குப் பதிவு நாளன்று (ஏப். 23) ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படுகிறது.

அதன்படி, வணிக வா்த்தகத் தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரிந்து வாக்காளா்களாகப் பதிவு செய்தவா்கள் ஊதியம் பெறுவதற்கு தகுதியுடையவா்களாவா். ஆகவே, விடுமுறை நாளை காரணமாகக் கொண்டு பணியாளரின் ஊதியத்தைப் பிடித்தம் செய்யக் கூடாது. சுழற்சி முறையில் பணிபுரியும் பணியாளா்கள் உள்பட அனைத்துப் பணியாளா்களுக்கும் விடுமுறை பொருந்தும்.

தினக்கூலி, தற்காலிக தொழிலாளா்களுக்கும் இது பொருந்தும். தோ்தல் நடைபெறும் தொகுதிக்கு வெளியே பணிபுரிவோரும் ஊதியம் பெறலாம். விதிமுறைகளை மீறும் தொடா்புடைய நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.