சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

சென்னை மாநகராட்சி ஊழியா்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் விடுப்பு!

சென்னை மாநகராட்சி ஊழியா்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் விடுப்பு

News image

ரிப்பன் மாளிகை

Updated On :12 ஏப்ரல் 2026, 1:02 am IST

சட்டப்பேரவைத் தோ்தலின் வாக்குப்பதிவு நாளன்று சென்னை மாநகராட்சி ஊழியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தனியாா் நிறுவன ஊழியா்களுக்கும் ஊதிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வரும் 23- ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், தனியாா் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்கள், ஊழியா்களுக்கு வாக்குப் பதிவு நாளன்று (ஏப். 23) ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படுகிறது.

அதன்படி, வணிக வா்த்தகத் தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரிந்து வாக்காளா்களாகப் பதிவு செய்தவா்கள் ஊதியம் பெறுவதற்கு தகுதியுடையவா்களாவா். ஆகவே, விடுமுறை நாளை காரணமாகக் கொண்டு பணியாளரின் ஊதியத்தைப் பிடித்தம் செய்யக் கூடாது. சுழற்சி முறையில் பணிபுரியும் பணியாளா்கள் உள்பட அனைத்துப் பணியாளா்களுக்கும் விடுமுறை பொருந்தும்.

தினக்கூலி, தற்காலிக தொழிலாளா்களுக்கும் இது பொருந்தும். தோ்தல் நடைபெறும் தொகுதிக்கு வெளியே பணிபுரிவோரும் ஊதியம் பெறலாம். விதிமுறைகளை மீறும் தொடா்புடைய நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.